தபால் வாக்களிப்புக்கு 712,321 பேர் தகுதி : 24,268 விண்ணப்பங்கள் நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 20, 2024

தபால் வாக்களிப்புக்கு 712,321 பேர் தகுதி : 24,268 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் நிலையில், 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில், 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 26ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக திகதியாக செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment