மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் : 12 வருடங்களுக்கு பிறகு அடையாளங்காணப்பட்ட குற்றவாளிகள் - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, August 30, 2024

demo-image

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் : 12 வருடங்களுக்கு பிறகு அடையாளங்காணப்பட்ட குற்றவாளிகள்

DSC_0229
கடந்த 2012ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கான விசாரணை நேற்று வியாழக்கிழமை (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்போது 52 சந்தேக நபர்களில் 4 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

அதனையடுத்து, தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ள நிலையில், 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, ஏனைய 48 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12 வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகள் தற்போது நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டபடி, நேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பிலான சாட்சியங்கள் யாவும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்து ஒரு மாத காலத்துக்குள் எதிர்த் தரப்பு சாட்சியங்களுக்காக ஏற்கனவே தவணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த 52 சந்தேக நபர்களில் 4 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏனைய 48 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த 4 சந்தேக நபர்களுக்குமான தீர்ப்பினை வழங்க நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மன்னார் நகரத்தை ஒட்டிய கோந்தைப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கடற்றொழில் துறை பகுதியிலிருந்து போரின்போது இடம்பெயர்ந்து புத்தளம் பகுதிக்குச் சென்றிருந்த முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் திரும்பி வந்தபோது கோந்தைப்பிட்டி கடற்றொழில் துறையைத் தம்மிடம் முழுமையாக மீள தருமாறு கேட்டிருந்தனர்.

இதையடுத்து தமிழ் கடற்றொழிலாளர்களுக்கென மன்னாரின் இரண்டாம் கட்டைப் பகுதியில் வேறு இடம் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டது.

ஆனால், அந்த இடத்துக்கு இன்னொரு முஸ்லிம் கடற்றொழிலாளர் ஒருவர் உரிமை கோரி தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு முடியும் வரையில் தமிழ் கடற் தொழிலாளர்களை கோந்தைப்பிட்டியிலேயே தொழில் செய்ய அனுமதிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தமிழ் கடற்றொழிலாளர்களுக்கென மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தமிழ் கடற்றொழிலாளர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இடம்பெற்ற நீதிமன்றத்தின் மீதான தாக்குதலில் அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் காயமடைந்தனர்.

மேலும் மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டு குழப்பநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பின்னர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக 52 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரனைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் 12 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைகள் நிறைவுற்று நேற்று தீர்ப்பு வழங்க ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *