கைச்சாத்திடப்பட்டது பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, July 22, 2024

கைச்சாத்திடப்பட்டது பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (22) நண்பகல் 12 மணியளவில் கைச்சாத்திடப்பட்டது.

7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பில் 7 சிவில் சமூக பிரதிநிதிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கு வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தெடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த்து.

இந்நிலையில், இரு தரப்பினர்களுக்கு இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையில், தமிழ் அரசியல் கட்சி தலைவர்களான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் சி.வேந்தன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதனைத்தவிர அரசியல் சமூக செயற்பாட்டாளரான த.வசந்தராஜா, சட்டத்தரணி அ.ஜோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசியல் சமூக செயற்பாட்டாளரான செல்வின் இரேனியஸ், இராசலிங்கம் விக்னேஸ்வரன், அரசியல் விமர்சகரான ஏ.ஜதீந்திரா மற்றும் ம.நிலாந்தன் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment