2024 ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டளஸில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 47 ஓட்டங்களையும் சரித் அசலங்க 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
மீண்டும் மிக மோசமான துடுப்பாட்டத்தை பதிவு செய்த இலங்கை அணி 125 எனும வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
பங்களர்தேஷ் சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான், ரிஷாட் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் தஷ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பறினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் தௌஹித் ஹிரிடோய் 40 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் நுவன் துஷார 4 விக்கெட்டுகளையும், வணிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ரிஷாட் ஹொசைன் தெரிவானார்.
அந்த வகையில் குழு D இல் இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியுற்று, 5ஆவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி தனது முதலாவது போட்டியை வென்று 2 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இக்குழுவில் தென்னாபிரிக்கா, நெதர்லாந்து ஆகியன தாம் விளையாடிய ஒவ்வொரு போட்டியில் 2 புள்ளிகளைப் பெற்று முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தள்ளது.
குழு நிலையில் இறுதியில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment