பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த திருகோணமலையைச் சேர்ந்த ஹஸன் ஸலாமா - News View

About Us

About Us

Breaking

Sunday, June 16, 2024

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த திருகோணமலையைச் சேர்ந்த ஹஸன் ஸலாமா

திருகோணமலையைச் சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 கிலோ மீற்றர் தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நபராகவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது இஸ்லாமிய நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­துடைய இவர், கடந்த மூன்று மாதங்க­ளாக இச்சாதனை முயற்சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார்.

இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வருகிறார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திருகோணமலையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்வந்தையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார்.

இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா இலங்கையின் விளையாட்டுத்துறை வர­லாற்­றில் தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடையும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.

அது­மட்­டு­மன்றி, திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணி­ய­கத்­தினால் நடத்தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகியிருக்கிறார்.

பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத்துறைக்கு அப்பால் சென்று, தனது அர்ப்பணிப்புணர்வோடு நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment