தாய்லாந்தில் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓரின திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேறியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய தென்கிழக்காசியாவில் ஓரின திருமணத்தை வரவேற்ற முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.
அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
152 பேரைக் கொண்ட செனட் சபையில் இதற்கு எதிராக 4 பேர் வாக்களித்துள்ளதுடன், 18 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியுள்ளனர்.
குறித்த சட்டத்திற்கு தாய்லாந்து மன்னர் வஜிரலங்கோனின் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்னர் அந்நாட்டு அரச வர்த்தமானியில் வெளியாகி 120 நாட்களில் அது நடைமுறைக்கு வரும்.
இதேவேளை சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஆசியாவில் நேபாளம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு பின்னர் ஓரின திருமணத்திற்கு அனுமதி வழங்கிய மூன்றாவது நாடாக தாய்லாந்து பதிவாகும்.
No comments:
Post a Comment