கடைசி லீக் சுற்று வெற்றியுடன் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 19, 2024

கடைசி லீக் சுற்று வெற்றியுடன் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி

T20 உலகக் கிண்ண தொடரில் பங்கெடுத்திருந்த இலங்கை அணி வீரர்கள் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்று வரும் ICC T20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, லீக் சுற்றில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கை தோல்வி கண்டது.

அத்தோடு நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த போதிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது.

இந்நிலையில் இலங்கை அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்ட வணிந்து ஹசரங்க “இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் செய்த தவறுகளினால் தான் இந்த T20 கிரிக்கட் போட்டித் தொடரில் இருந்து விலக நேரிட்டதாகவும் அவர்கள் சரியாக விளையாடவில்லை எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment