குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட விசாரணைகள் : ஹர்ஷ டி சில்வாவுக்கு சிஐடியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 8, 2024

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட விசாரணைகள் : ஹர்ஷ டி சில்வாவுக்கு சிஐடியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

07ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த ஹர்ஷ டி சில்வா, பல சவால்களுக்கு மத்தியில் தான் நிதிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

தமக்கு அலுவலகம் இல்லை எனவும், சேவை செய்வதற்கு மூன்று பேர் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, சில சமயங்களில் தமது தனிப்பட்ட பணத்தில் அவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிலக்கரி விவகாரம், சீனி மோசடி, மத்திய வங்கியின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நிதிக்குழு தொடர்ந்தும் பேசி வருவதாகத் தெரிவித்த எம்.பி., பல பிரச்சினைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாருடைய நலன்களுக்காக இப்படிச் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தன் உயிர் பாதிக்கப்பட்டால் சபாநாயகருக்கும் பொறுப்பு உண்டு என்றார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று (07) பணிப்புரை விடுத்தார்.

நேற்று (7) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர், புதிய விசா வழங்கும் முறை தொடர்பான சர்ச்சையின் விசாரணையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கூறினார்.

விஎப்எஸ் (VFS) விசாரணையின் போது நான் மிரட்டல் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தேன். இந்த சவால்கள் இருந்தபோதிலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான எனது அர்ப்பணிப்பு வலுவாக உள்ளது.

முக்கிய நிதிச் சீர்திருத்தங்கள் உட்பட பலவற்றைச் சாதித்துள்ளோம்,” என்று அவர் தனது 'எக்ஸ் தளத்தில்' (X) பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment