தம்புள்ளையில் முதலாவது டி20 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, February 15, 2024

தம்புள்ளையில் முதலாவது டி20 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நாளை (17) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு டிக்கெட் கவுண்டர்களுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தி இருந்தது. 

இதேநேரம் முதல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்கு நேற்று பெரும் திரளான ரசிகர்கள் கூடினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே தம்புள்ளையில் போட்டி ஒன்றை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான டி20 போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 17, 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் தப்புள்ளையில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment