இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் மரணத்தின் பின்னர் இளையராஜா தனது முகபுத்தகத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.
“அன்பு மகளே” என பதிவிட்டு அவருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு கீழ் “ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிடப்பட்டு வருகின்றது.
இந்த பதிவானது அனைவரது மத்தியில் கவலையையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திரைப்பிரபலங்கள் தங்களது அனுதாபங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர், முக்கியமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டர் தளத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
அதில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது" என பதிவிட்டிருந்தார்.
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார்.
பவதாரிணி உடல்நலக்குறைவால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி (வியாழக்கிழமை) மாலை 5.20 மணியளவில் மரணமடைந்தார்.
No comments:
Post a Comment