இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய் : 15 நாட்களில் 5,428 நோயாளர்கள் பதிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 16, 2024

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய் : 15 நாட்களில் 5,428 நோயாளர்கள் பதிவு

இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நடப்பாண்டின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள்  கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொழும்பை அடுத்ததாக யாழ். மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும், இலங்கையில் பத்து மாவட்டங்களில் 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிரவும், நாடளாவிய ரீதியில் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை இன்று (16) வெளியிடப்படலாம் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment