யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு - News View

About Us

Add+Banner

Thursday, November 9, 2023

demo-image

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு

jjss
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில், இன்று (09) ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

சட்டத்தரணி சுவஸ்திகா உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பிலான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *