இலங்கையில் 9 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 23,534 முறைப்பாடுகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 12, 2023

இலங்கையில் 9 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 23,534 முறைப்பாடுகள்

பேஸ்புக் (Facebook) தொடர்பில் இவ்வாண்டின் முதல் 09 மாதங்களில் 23,534 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழினுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக் கெமுனுபொல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 70 வீதமானவை பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு பெற்று தருவதாக இணைய வழியில் இடம்பெற்ற மோசடிகளே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

மேலும் பிரமிட் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மோசடிகளும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலியான பேஸ்புக் கணக்கு உருவாக்கியமை, பேஸ்புக் கணக்குகளை ஊடுருவியமை உள்ளிட்ட முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த மே மாதத்தில் மொத்தம் 3,328 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, முறைப்பாடு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment