பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்­க­ர­வாத தடுப்­புச்­ சட்­டத்­தினை விட கொடி­ய­து - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்­க­ர­வாத தடுப்­புச்­ சட்­டத்­தினை விட கொடி­ய­து - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்

அண்­மையில் அரசு வர்த்­த­மா­னியில் வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டமூலம் தற்போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தினை விட மிகக் கொடி­ய­தாகும். இந்த சட்டமூலத்தை வன்மை­யாக எதிர்ப்­ப­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். சுஹைர் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் எம்.எம்.சுஹைர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘பயங்­க­ர­வாதம் தொடர்­பான சட்டமூலம் 2017 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டது. இந்த சட்டமூலத்­துக்கு மக்கள் பாரிய எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர். இத­னை­ய­டுத்து இந்தச் சட்­ட­மூலம் கைவி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து கடந்த மார்ச்­ மாதம் பயங்­க­ர­வாத தடுப்­புச்­ சட்டம் சில திருத்­தங்­க­ளுடன் கொண்டுவரப்­பட்­டது. இதற்கும் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. இத­னை­ய­டுத்து நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜபக்ஷ சட்டமூலத்தில் சில கொடிய விட­யங்­களை நீக்குவதாகக் கூறி திரும்­பவும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூலம் என்ற பெயரில் கடந்த 15 ஆம் திகதி வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யிட்­டுள்ளார்.

இன்று நாடு அந்­நிய முத­லீ­டு­களை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றது. மற்றும் ஏற்­று­மதி, உல்­லாசப் பயணத்துறை என்­ப­வற்றை நம்­பி­யி­ருக்­கி­றது. இந்­நி­லையில் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்டத்தைக் கொண்டு வந்தால் எமது நாட்டில் தொடர்ந்து பயங்­க­ர­வாதம் இருப்­ப­தா­கவே சர்வதேசம் கருதும்.

‘அர­க­லய’ போன்ற போராட்­டங்­களை தடுத்து நிறுத்­து­வ­தற்கும், சமூக ஊட­கங்கள் உட்­பட ஊடகங்­களை ஒடுக்­கு­வ­தற்கும் டயஸ்­போரா மற்றும் முஸ்லிம் பயங்­க­ர­வாதம் என்­ப­வற்றைத் தடுப்­ப­தற்­கு­மா­கவே இச்­சட்டமூலம் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சட்டமூலத்தின் மூலம் விவ­சா­யிகள் தங்­க­ளுக்குத் தேவை­யான உரத்­தினைக் கோரி போராட்டம் நடத்­தினால் அப்­போ­ராட்டம் நாட்டின் சட்­டத்தை சீர்­கு­லைத்­துள்­ள­தாகக் கூறி விவசாய போராட்டக்­ கா­ரர்­களின் தலை­வரைக் கைது செய்து குறைந்­தது ஒரு வருட காலம் சிறையில் அடைக்க முடியும்.

அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்­புச் ­சட்டம் சர்­வ­தேச ரீதியில் கொடிய சட்டம் எனக் கணிப்பிடப்பட்­டுள்­ளது. இதை­விட கொடிய சட்டம் தற்போது கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமாகும்.

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சட்டங்கள் சர்வதேசம் எம்மைத் தூரப்படுத்திவிடுவதற்குச் சாதகமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment