யாழ். நுண்கலை பீட உளச்சார்புப் பரீட்சை விண்ணப்பத் திகதி நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

யாழ். நுண்கலை பீட உளச்சார்புப் பரீட்சை விண்ணப்பத் திகதி நீடிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடாத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களில், குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசேட தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்து சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான முடிவுத் திகதி கடந்த 21 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மாணவர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து எதிர்வரும் சனிக்கிழமை (30) மதியம் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment