நானும் அவ்வேளை எனது தலைவராக காணப்பட்ட பிள்ளையானும் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தவேளை அவர் திரிபோலி பிளாட்டுன் (Tripoli Platoon) என்ற கொலைக் குழுவை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார் என ஹன்சீர் அசாத் மௌலானா சனல் 4 வீடியோவில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌிக்கொணர்வுகள் இருப்பதாக இதற்கு முன்னர் தகவல் வௌியான நிலையில், அது தொடர்பான Dispatches நிகழ்ச்சி நேற்றிரவு ஔிப்பரப்பானது.
இந்த அறிக்கையில் நிகழ்ச்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் Sunday Leader ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான தகவல்களும் உள்ளடங்கியிருந்தன.
பிள்ளையான என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் ஊடகப் பேச்சாளர் மற்றும் நிதிச் செயலாளராக செயற்பட்ட ஹன்சீர் அசாத் மௌலானா மற்றும் தற்போது நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் பெயர் குறிப்பிடாத அரச அதிகாரி ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் பல விடயங்களை வௌிக்கொணர்ந்துள்ளனர்.
திறமைசாலிகளை தெரிவு செய்து இணைந்து செயற்படுங்கள் என கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார், ஆகவே பிள்ளையான் தனது நபர்களை வைத்து திரிபோலி கொலைக் குழுவை உருவாக்கினார் எனவும் ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
திரிபோலி பிளாட்டுன் கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டது எனவும் ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான நபர்களை தெரிவு செய்து இலக்கு வைத்து திரிபோலி பிளட்டுன் கொலை செய்தது என ஹன்சீர் அசாத் மௌலானாதெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment