அசாத் மௌலானாவின் பேட்டியை ஆய்வு செய்யும்போது பல நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன : நீதியான விசாரணை நடந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் அரசியல் சதி வெளிப்படும் - News View

About Us

About Us

Breaking

Friday, September 8, 2023

அசாத் மௌலானாவின் பேட்டியை ஆய்வு செய்யும்போது பல நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன : நீதியான விசாரணை நடந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் அரசியல் சதி வெளிப்படும்

பிரித்­தா­னி­யாவின் சனல் 4 தொலைக்­காட்சி வெளி­யிட்­டுள்ள இலங்­கையின் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் எனும் 47 நிமிட காணொ­ளிதான் இன்று பெரும் பேசு பொரு­ளா­கி­யுள்­ளது.

இதற்கு காரணம் இருக்­கின்­றது. சர்­வ­தேச பயங்­க­ர­வாத விவ­கா­ரங்கள் குறித்த ஆய்­வா­ள­ராக கூறப்­ப‌டும் பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய மத தீவி­ர­வா­தம்தான் காரணம், இதில் அர­சியல் பின்­னணி இல்லை என ஒரு புத்­த­கத்தை வெளி­யிட்டு சில வாரங்­க­ளி­லேயே, இல்லை அது முழுக்க முழுக்க அர­சியல் சதி நட­வ­டிக்கை என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இந்த காணொளி வெளி­யாகி சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத்தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­ கொண்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.

கரை­யோர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வ­பிட்டி - புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகிய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

அதேதினம் பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக உள்ள ‘நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதா­ரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம் பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில், குண்­டு­ வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­ த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களை இலக்கு வைத்து தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்­கொலை குண்­டு­தா­ரி­யினால் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டது.

இந்த 8 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால், 30 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 268 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 27 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 594 பேர் காய­ம­டைந்­தனர்.

இந்த கொடூர கொலைகள் தொடர்பில் இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் இந்த தொடர் குண்டுத் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி யார், காரணம் தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்டுவரும் பின்­ன­ணியில் சனல் 4 இன் காணொளி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

உண்­மையில், சனல் 4 தொலைக்­காட்சி காணொ­ளிக்கு அமைய, அத்­தொ­லைக்­காட்சி உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் அர­சியல் சதி இருந்­த­தாக முன்வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கு பிர­தான சான்­றாக, தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலைவர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் அல்­லது பிள்­ளை­யானின் செய­லா­ள­ராக இருந்த அசாத் மெள­லானா என அறி­யப்­படும் மொஹம்மட் ஹன்­சீரின் சாட்­சி­யத்தை முன் வைக்­கின்­றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டே அசாத் மெள­லானா, சனல் 4 இடம் கூறி­யுள்ள இந்த விட­யங்­களில் பல­வற்றை உள்­ள­டக்கி, ஜெனீவா மனித உரிமை பேரவை முன்­னி­லையில் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார். 

அதன்­படி முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பத­விக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக, அதற்­கான கட்­டாய சூழலை ஏற்­ப­டுத்த சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் அல்­லது பிள்­ளையான், உளவுத்துறை பிர­தானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உள்­ளிட்டோர் ஊடாக இந்த தற்­கொலை தாக்­குதல் அரங்­கேற்­றப்­பட்­ட­தாக கூறப்­பட்­டுள்­ளது.

இதில், பிர­தா­ன­மாக இந்த தற்­கொலை தாக்­கு­தலின் ஆரம்ப புள்ளி தொடர்பில் வெளிப்­ப‌­டுத்தல் இருக்கும் நிலையில், அதற்­கான ஏனைய சான்­று­களை தேடி நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும்.

அதா­வது கடந்த 2017 இல் காத்­தான்­குடி அலியார் சந்­தியில் நடந்த மோதலை அடுத்து, சஹ்­ரானின் சகோ­த­ரர்கள் உள்­ளிட்டோர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

அப்­போது, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த பிள்­ளை­யானும் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியல் கைதி­யாக இருந்தார். 

மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லை­யி­லேயே சஹ்­ரானின் சகோ­தரர் சைனி மெள­லவி (சாய்ந்­த­ம­ருது சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­தவர்) தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் பிள்­ளை­யா­னுக்கும் இடையில் ஏற்­பட்ட உறவு உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை தாக்­குதல் வரை சென்­ற­தாக கூறப்­ப‌­டு­கின்­றது.

பிள்­ளை­யானின் குழு, இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வுடன் சேர்ந்து செயற்­பட்­டு­வந்­தது என்­பது பிர­சித்­த­மான இர­க­சி­ய­மாக இருக்கும் நிலையில், அந்த வலை­ய­மைப்­புக்குள் இருந்த அப்­போ­தைய இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் பிர­தா­னி­யாக செயற்­பட்ட பிரி­கே­டியர் சுரேஷ் சலே (தற்­போது உளவுத்துறை பிர­தானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே) உள்­ளிட்­டோரால் வகுக்­கப்­பட்ட திட்­டமே உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் என அசாத் மெள­லானா கூறு­கின்றார்.

ஆனால், அசாத் மெள­லானா அகதி அந்­தஸ்து பெறு­வ­தற்­காக இவ்­வாறு பொய் கூறு­வ­தாக பிள்­ளையான் தெரி­விக்கும் நிலையில், உள­வுத்­துறை பிர­தானி சுரேஷ் சலேவும் குற்­றச்­சாட்டை மறுக்­கின்றார்.

ஆனால் சனல் 4 இல் அசாத் மெள­லானா கூறும் விட­யங்கள் மற்றும் ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் அவர் வழங்­கி­யுள்ள வாக்குமூலத்தில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்­களைப் பார்க்கும்போது, ஏனைய சான்­றுகள் ஊடாக அந்த விட­யங்­களை உறுதி செய்ய முடி­யு­மாக இருப்பின் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்­த­தாக நம்­பப்­ப‌டும் அர­சியல் சதியை உறு­தி­யாக வெளிப்­ப­டுத்­திக்­ கொள்­ளலாம்.

அசாத் மெள­லா­னாவின் கூற்றுப்படி, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் அர­சியல் சதியில் அவரும் சேர்ந்தே செயற்­பட்­டி­ருக்­கின்றார். அந்த விடயம் வெளிச்­சத்­துக்கு வரும் என்ற அச்­சத்தில் உள­வுத்­துறை பிர­தானி மிரட்­டிய பின்­ன­ரேயே உயிர் அச்­சு­றுத்­தலால் நாட்டை விட்டு வெளி­யே­றி­ய­தாக அவர் கூறு­கின்றார்.

உள­வுத்­துறை பிர­தானி சுரேஷ் சலே, புத்­தளம் வனாத்­து­வில்லு பகு­தியில் வைத்து சஹ்ரான் உள்­ளிட்­டோரை சந்­தித்­தமை, அதன் பின்­ன­ரான நகர்­வுகள், தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் தற்­கொலை குண்­டு­தா­ரி­யான ஜமீல் குண்டை வெடிக்கச் செய்­யாமை, கிழக்கில் சஹ்ரான் குழு­வி­னரின் பாது­காப்பு மற்றும் இருப்பை உறுதி செய்­தமை போன்ற விட­யங்­களை வைத்து அசாத் மெள­லா­னாவின் பேட்­டியை ஆய்வு செய்யும்போது பல நியா­ய­மான சந்­தே­கங்கள் எழு­கின்­றன. அது உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் அர­சியல் சதி இருந்­ததா எனும் பாரிய கேள்­வியை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் திடீ­ரென ஓரிரு நாட்­களில் திட்­ட­மிட்டு நடாத்­தப்­பட்­டது அல்ல எனவும் அது சுமார் 3 வருட திட்­டத்தின் பிர­தி­பலன் எனவும் அசாத் மெள­லானா கூறு­கின்றார். அப்­ப­டி­யானால் இந்த விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­யா­ளர்கள் மேல­திக கரி­சனை எடுத்­துக்­ கொள்ள வேண்டும். 

அசாத் மெள­லானா பிர­சித்­த­மாக சொல்­லி­யி­ருக்கும் விட­யங்­களை வாக்குமூல­மாக பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுத்து அதி­லி­ருந்து மேல­திக விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­படல் வேண்டும். இதற்­காக சட்ட நடவடிக்கை எடுத்து அதிலிருந்து மேலதிக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும். இதற்காக சட்டமா அதிபர் உடனடியாக ஆலோசனைகளை அளிப்பதுடன், அந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வேண்டும்.

இந்த்த சனல் 4 காணொளியின் ஊடாக பிரதான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே, இப்போதும் உளவுத்துறை பிரதானியாக இருக்கும் நிலையில், அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இல்லையேல் நீதியான விசாரணைகள் கேள்விக் குறியாகும் நிலையில், உள்ளக பொறிமுறை மீது மக்களின் நம்பிக்கை இல்லாமல் போக்கும். அவ்வாறானதொரு நிலைமை தலைதூக்குமானால் பல தரப்புக்களும் கோருவதை போன்று சர்வதேச விசாரணை ஒன்றே சாத்தியமாகலாம்.

Vidivelli

No comments:

Post a Comment