ஊழலுக்கு எதிரான சட்டத்தை அமுலாக்கி விசேட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Monday, September 11, 2023

ஊழலுக்கு எதிரான சட்டத்தை அமுலாக்கி விசேட வர்த்தமானி வெளியீடு

ஊழல் மோசடி எதிர்ப்பு சட்டம் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ விசேட அறிக்கையொன்றின் மூலம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் இந்த ஊழல் மோசடி சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நியதிகள் நடைமுறைக்கு வருமென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஊழல் மோசடி எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த ஜூலை 19 ஆம் திகதி திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு மேலதிகமாக குற்றம் ஒன்றின்போது குற்றவாளியாகவும் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், பாதுகாப்பு வழங்கும் சட்டமும் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் அந்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment