கம்பனி காடையர்களை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் : ரமே‌ஷ பத்திரணவிடம் தெரிவித்த மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 10, 2023

கம்பனி காடையர்களை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் : ரமே‌ஷ பத்திரணவிடம் தெரிவித்த மனோ கணேசன்

பொலிஸ்காரர்களை போலவும், நீதிமன்ற கட்டளை இருப்பதாகவும் நடித்து அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்கள் இவர்கள் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் சொன்னேன். கம்பனி காடையர்களை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் என மனோ கணேசன், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கூறியுள்ளார்.

இரத்தினபுரி காவத்தை பிளான்டேசன் வெள்ளந்துரை தோட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ஒவ்வொருமுறையும் சம்பவம் நடக்கிறது. நாம் கேள்வி எழுப்புகிறோம். நீங்கள் பதில் கூறுகிறீர்கள். அல்லது ஒரு அரசாங்க அரசியல்வாதியை அங்கே அனுப்பி அதன் பின் ஒளிந்து கொள்கிறீர்கள். இதற்கு தீர்வுதான் என்ன? என்று மேலும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கம்பனிக்காரர்களுடன் பணியாற்ற முடியவில்லை. ஜனாதிபதியிடம் பேசி முழுமையான தீர்வை தேடுவோம் என ரமேஷ் பத்திரண எனக்கு பதிலளித்தார் என்றார் மனோ கணேசன்.

No comments:

Post a Comment