(நா.தனுஜா)
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம், வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டுக்கு அனுப்பி வைத்த பணத்தின் பெறுமதி 499.2 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை இவ்வாண்டு ஜனவரி - ஆகஸ்ட் வரையான 8 மாத காலத்தில் வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 3,862.7 மில்லியன் டொலர்களாகும்.
2022ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்பல்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வெளிநாட்டு பண அனுப்பல்களில் 74.4 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பண அனுப்பல்கள் 541 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருப்பதுடன், இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 78 சதவீத அதிகரிப்பைக் காண்பித்துள்ளது.
மேலும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்பல்கள் கடந்த ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் முறையே 437.5 மில்லியன் டொலர், 407.4 மில்லியன் டொலர், 568.3 மில்லியன் டொலர், 454 மில்லியன் டொலர், 476 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment