மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் : தேடப்பட்ட ஆசிரியர் பொலிஸில் சரண் - News View

About Us

About Us

Breaking

Monday, August 7, 2023

மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் : தேடப்பட்ட ஆசிரியர் பொலிஸில் சரண்

பாறுக் ஷிஹான்

அரச பாடசாலையொன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

தலைமறைவான சந்தேகநபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணியூடாக பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி பாடசாலையொன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி மாணவன் ஒருவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரான ஆசிரியர் தலைமைறைவாகி இருந்தார்.

குறித்த சந்தேகநபரான ஆசிரியர் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியிலுள்ள பிரபல அரச பாடசாலையொன்றில் உடற்கல்வி ஆசிரியராகச் செயற்பட்டு வந்துள்ளதுடன், கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி விளையாட்டறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவனை துஸ்பிரியோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இரு வாரங்கள் கழிந்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸார் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தரம் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கின்ற குறித்த மாணவனிடம் வாக்குமூலமொன்றை இரு தடவை பெற்றுச் சென்றிருந்ததுடன், மாணவனை துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மாணவன் கடந்த ஆகஸ்ட் புதன்கிழமை (2) மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment