‘X-Press Pearl’ கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேவையான அறிவிப்புகள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் சட்டத்தரணி நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் இந்த இழப்பீடு பெறப்படவுள்ளது.
கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் இடைக்கால நட்டஈடாக 890 இலட்சம் டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடைக்கால இழப்பீட்டை வழங்குவதற்கு கப்பல் நிறுவன காப்புறுதி நிறுவனமும் சட்டத்தரணிகள் நிறுவனமும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தன.
அது தொடர்பான அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, இரு தரப்பினரும் இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
அத்துடன் இடைக்கால நட்டஈடாக வழங்கப்படும் இந்த தொகை, கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்கத்துக்கும் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் வழங்க இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment