வெளிப்படையான, பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு பௌத்த மத குருக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 9, 2023

வெளிப்படையான, பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு பௌத்த மத குருக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன

வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு பௌத்த மத குருக்களின் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராறச்சியின் தலைமையில் அண்மையில் (03) பாரளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இதன்போது வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கமொன்றுக்கான சட்டங்கள் தொடர்பிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டங்கள் தொடர்பிலும் பௌத்த மத குருக்கள் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

அத்துடன் நாட்டின் அனைத்துத் துறைகள் தொடர்பிலும் தேசிய கொள்கை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவை தொடர்பில் பௌத்த மத குருக்கள் சுட்டிக்காட்டினர்.

விசேடமாக அரசியல் கொள்கை மற்றும் தேசிய கொள்கை என்பவற்றை குழப்பிக் கொள்ளாமல் ஒவ்வொரு அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக செயற்படுத்தக் கூடிய தேசியக் கொள்கை இந்நாட்டுக்கு முக்கியமானது என மத குருக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், ஏனைய மத அமைப்புக்களின் தேவைக்கமைய, பௌத்த மத குருக்கள் தொடர்பில் உருவாக்கப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பில் செயற்படுவதற்குச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்தும் பௌத்த மத குருக்கள் சுட்டிக்காட்டினர்.

இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் குழு முடியுமான தலையீட்டை மேற்கொள்வதாக குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் அறிக்கையொன்றைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவில், வண. ஆணமடுவே தம்ம திஸ்ஸ தேரர், வண. பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரர், வண. (கலாநிதி) வலேபொட குணசிறி தேரர், வண. (சிரேஷ்ட பேராசிரியர்) கிவுலே கெதர நாரத தேரர், வண. (சிரேஷ்ட பேராசிரியர்) இந்துராகாரே தம்மரத்ன தேரர், வண. (பேராசிரியர்) பின்னவல சங்கசுமன தேரர், வண. (கலாநிதி) நாம்பிரித்தன்கடவர ஞானரத்ன தேரர், வண. (பேராசிரியர்) மெதகொட அபயதிஸ்ஸ தேரர், வண. (கலாநிதி) கும்பல்கொட தம்மாலோக தேரர், வண. கந்தேகம தீபவன்ஷாலங்கார தேரர் மற்றும் வண. அகுரடியே நந்த தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயன கிரிந்திகொட, ஜயந்த வீரசிங்க மற்றும் மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment