பிரிட்டனில் எரிஸ் என்ற புதிய வகை கொவிட் வைரஸ் பரவுவதை தொடர்ந்து அது குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வைரஸ் குறித்தும் அது பரவும் விதம் குறித்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் வகையைச் சேர்ந்த எரிஸ் என்ற புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவுவது முதன்முதலாக 31ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை பாதிக்கப்பட்ட பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் கொவிட்19 குறித்த ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டில் பரவும் எந்தவொரு வைரஸ் குறித்தும் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இது குறித்து அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் வைரஸ் பரவுவதை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனில் பரவும் வைரசினை பொறுத்தவரை நாங்கள் எச்சரிக்கையுடன் உள்ளோம் நிலைமைய உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய முழுவதும் Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது தொடர்பில் ஆராய்ந்தபோது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment