வருடாந்தம் 1400 பஸ்கள் விபத்துகள் மூலம் சேதம் : 46.5 கோடி ரூபா செலவு : 80 கோடி ரூபா வருமானம் இழப்பீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

வருடாந்தம் 1400 பஸ்கள் விபத்துகள் மூலம் சேதம் : 46.5 கோடி ரூபா செலவு : 80 கோடி ரூபா வருமானம் இழப்பீடு

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து 400 பஸ்கள் வருடாந்தம் விபத்துக்குள்ளாகுவதாகவும் குறித்த பஸ்களை புனரமைத்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு வருடமொன்றுக்கு 46.5 கோடி ரூபா செலவிடப்படுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வருடமொன்றுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து 400 பஸ்கள் விபத்துக்குள்ளாகின்றன.

குறித்த பஸ்களை மீள போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்படும் காலப்பகுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 கோடி ரூபா வருமானம் இழக்கப்படுகிறது. மேலும் குறித்த பஸ்களை புனரமைத்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு வருடமொன்றுக்கு 46.5 கோடி ரூபா செலவிடப்படுகிறது.

அதற்கமைவாக சாரதிகளை பயிற்றுக்குவிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த வருடம் 600 சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதிகள் மூலம் மேல் மாகாண சாரதிகளுக்கு பயிற்சியளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளால் இழைக்கப்படும் தவறுகளை ஆவணப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சாரதிகளுக்கு தகுதி விதிக் கோவைகள் அடங்கிய புத்தகமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசேட பயிற்சி அளிக்கப்பட வேண்டிய சாரதிகள் அடையாளங்காணப்படவுள்ளனர்.

அனைத்து டிப்போக்களிலும் விபத்து விசாரணை அதிகாரிகள் நேற்று முதல் தகுதி பரிசோதனை புத்தகத்தை பேண வேண்டியவை தொடர்பிலான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 218 பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment