இணையத்தில் ஆபாசப் படங்களை வெளியிட்டால் இனி ஆபத்து - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

இணையத்தில் ஆபாசப் படங்களை வெளியிட்டால் இனி ஆபத்து

இணையத்தளத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளன.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பமால் ஜயநெத்சிறி தெரிவித்தார்.

No comments:

Post a Comment