குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியராக (SHO) மீண்டும் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கள தாய்மாருக்கு சட்டவிரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஒழுக்காற்று விசாரணைகளில் அவர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியர் ஷாபியை மீண்டும் குருணாகல் போதனா வைத்தியசாலையிலேயே நியமனம் வழங்கி கடமையில் இணைக்க, சுகாதார அமைச்சு குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் வைத்தியர் ஷாபியை இவ்வாறு குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமைகளில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்தது.
இந்நிலையிலேயே நேற்றுமுன்தினம் (30) குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அங்கு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அத்துடன் வழமை போன்றே பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்த சிசேரியன் சத்திர சிகிச்சைகளிலும் வைத்தியர் ஷாபி பங்கேற்று வெற்றிகரமாக அந்நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்.
4 வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் இவ் வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment