போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் முற்றுகை : மூவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Friday, June 2, 2023

போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் முற்றுகை : மூவர் கைது!

நாரஹேன்பிட்டி எல்விட்டிகல மாவத்தை பகுதியில் போலி ஆவணம் தயாரிக்கும் நிலையம் ஒன்றை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணிகள் மற்றும் சமாதான நீதிவான்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள், 3 போலி அடையாள அட்டைகள், சேவை அடையாள அட்டை, இரண்டு கணனிகள் மற்றும் போலியான ஆவணங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு அச்சிடும் கருவிகள், 260 வெவ்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பெலேவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் வெள்ளிக்கிழமை (02) அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment