பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம், திருத்தங்களுடன் நேற்று சபையில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று சபையில் இடம்பெற்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் சட்டமூலத்தை, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
சட்டமூலத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக விவாதத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிட்டனர்.
அந்த வகையில் சட்டமூலத்திற்கு ஆதரவாகவே அனைவரது கருத்துக்களும் அமைந்திருந்தன.
அதேவேளை, பாராளுமன்றம் வரவு செலவு திட்ட அலுவலகம் அரசியல் தலையீடு இல்லாமல் சுயாதீனமாக இயங்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
நேற்றையதினம் முழு நாள் விவாதத்தை தொடர்ந்து சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment