இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளிகள் உயிரிழப்பு : தரம் குறித்து ஆராய்கின்றது சுகாதார அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Monday, June 19, 2023

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளிகள் உயிரிழப்பு : தரம் குறித்து ஆராய்கின்றது சுகாதார அமைச்சு

இலங்கையில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழக்கின்றமை மற்றும் பல்வேறுவிதமான பக்கவிளைவுகளை எதிர்கொள்கின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய கடன் உதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரு மருந்துகளே நோயாளிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டே இந்த மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த மருந்துப் பொருட்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழந்தமை மற்றும் பல்வேறு விதமான பக்கவிளைவுகளை எதிர்கொண்டமை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்தார்.

மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து நஸ்டஈட்டினை பெறுவது குறித்து குறிப்பிட்ட குழுவினர் ஆராய்வார்கள். அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு இந்த மருந்தினை கொடுத்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

குடலிறக்க சத்திர கிசிச்சைக்காக மயக்கமருந்தினை கொடுத்தவேளை அவர் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment