கோட்டாவுக்கு நடந்ததைப் போன்று ரணிலுக்கு நடக்க பொதுஜன பெரமுன ஒருபோதும் இடமளிக்காது - மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Monday, June 19, 2023

கோட்டாவுக்கு நடந்ததைப் போன்று ரணிலுக்கு நடக்க பொதுஜன பெரமுன ஒருபோதும் இடமளிக்காது - மஹிந்தானந்த

(எம்.வை.எம்.சியாம்)

கோட்டாபய ராஜபக்சவிற்கு நடந்ததைப் போன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடக்க பொதுஜன பெரமுன ஒருபோதும் இடமளிக்காது. நாட்டில் எழுந்துள்ளது அரசியல் பிரச்சினையல்ல, வாழ்வாதார பிரச்சனை. எனவே தேர்தலின்போது மாத்திரம் அரசியலில் ஈடுபடுவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வித்தியாசமான கதைகளை யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான் நாட்டிலும், கிராமப்புறங்களிலும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பற்றி பேசுவதில் பயனில்லை. வெறும் நேர விரயம் மாத்திரமே. அவரது 60 பேர் கொண்ட குழு நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமர்ந்திருக்கும். அவர் தனது உறுப்பினர்களை நீண்ட காலத்துக்கு தம்வசம் வைத்திருக்க முடியாது.

இதேவேளை, முகப்புத்தக தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கதி என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. அதன் காரணமாக கடந்த காலங்களில் ஜே.வி.பி.யின் கூட்டங்களில் இருந்த நண்பர்கள் இன்று எமது சந்திப்புக்கு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment