இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய வகை வேன் ஒன்று விபத்திற்குள்ளகியுள்ளது.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் எதிர்திசையில் இருந்து வந்த எரிபொருள் பவுசருடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (20) அதிகாலை கொழும்பு கண்டி வீதியின் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதவடுன்ன பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வேனில் 6 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்களில் 5 பேர் காயமடைந்து வதுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொல்ஹேன்கொட இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவொன்று கடமைக்காக கிரித்தலை முகாமிற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் இராணுவ பணிக்குழு சார்ஜென்ட் உள்ளிட்ட இரு சார்ஜென்ட்கள், 3 கோப்ரல்கள் காயமடைந்துள்ளனர்.
பவுசரின் சாரதியின் கவனக்குறைவால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதற்கமைய, குறித்த பவுசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment