168 பேருடன் இலங்கை வந்த 'திப்பு சுல்தான்' - News View

About Us

About Us

Breaking

Monday, June 19, 2023

168 பேருடன் இலங்கை வந்த 'திப்பு சுல்தான்'

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான PNS 'திப்பு சுல்தான்' கப்பல் நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நல்லெண்ணை விஜயமாக நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்த கப்பலை நேற்றுக் காலை இலங்கை கடற்படையினர் கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்றுள்ளனர்.

'திப்பு சுல்தான்' யுத்தக் கப்பல் 168 பேருடன் இலங்கை வந்துள்ளதுடன் அதன் நீளம் 134.1 மீற்றராகும்.

பாகிஸ்தான் கடற்படை கெப்டன் ஜவாத் ஹுசைன் தலைமையில் வருகை தந்துள்ள இந்த கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் தரித்திருப்பதுடன் நாளை 20 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

இந்தக் கப்பல் இலங்கையில் தரித்திருக்கும் இரண்டு தினங்களிலும் இரண்டு நாடுகளினதும் கடற்படையினருக்குமிடையே நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment