இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை எதிர்க்கட்சியினரே தவறாக வழிநடத்துகிறார்கள் - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 24, 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை எதிர்க்கட்சியினரே தவறாக வழிநடத்துகிறார்கள் - செஹான் சேமசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை எதிர்க்கட்சியினரே தவறாக வழிநடத்துகிறார்கள். தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காகவே இவரை பதவி நீக்க அரசாங்கம் தீர்மானித்தது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனக ரத்நாயக்க என்பவர் நாட்டுக்காக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் சிலவற்றுக்கு தடையாக இருந்த நபர். இவரை எதிர்க்கட்சி குழுவொன்றே வழிநடத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்போது அந்த நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு ஜனக ரத்நாயக்கவை எதிர்க்கட்சி பயன்படுத்தியுள்ளது.

நாட்டை ஸ்தீரமான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது ரத்நாயக்க போன்றோர் அதற்கு தடையாக இருந்துள்ளனர். இவ்வாறான ஒருவருக்காகவே எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர்.

நாட்டில் மீண்டும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தீரமற்ற நிலைமை ஏற்படுமாக இருந்தால் இலங்கை மீது சர்வதேச ரீதியில் எப்படி நம்பிக்கை ஏற்படும்.

கடினமான நிலைமையிலேயே அரசாங்கம் நாட்டை நடத்திச் செல்கிறது. இதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாக இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்.

மின் கட்டமைப்பு துறையில் சிக்கல் நிலை ஏற்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்புக்கூற வேண்டும். தவறுகளை திருத்திக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment