இலங்கை கடற்படையினரால் நேற்றையதினம் (02) தலைமன்னார், மணல்பாறை அண்டிய கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 4 கிலோவிற்கும் அதிகமான (ஈரமான எடை) ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மன்னா மூலம் நேற்று தலைமன்னார், மணல்பாறைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, மிதந்து கொண்டிருந்த கோணியொன்றை அவதானித்து அதனை சோதனையிட்டபோது, அதில் 4 பொதிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) ஐஸ் போதைப் பொருளை (Crystal Methamphetamine) கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த ஐஸ் போதைப் பொருளின் (Crystal Methamphetamine) தெரு மதிப்பு ரூபா 67.5 மில்லியன் (ரூ. 6 கோடி 75 இலட்சம்) இற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது .
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment