வேலை பெற்றுத் தருவதாக பண மோசடி : 24 வயதுடைய இளைஞர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 27, 2023

வேலை பெற்றுத் தருவதாக பண மோசடி : 24 வயதுடைய இளைஞர் கைது

(எம்.வை.எம்.சியாம்)

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தலம் பொலிஸாரினால் கருங்கலே வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment