கல்வி அமைச்சர் மண்ணிப்பு கோர வேண்டும், உங்களது கெளரவம் மேலும் உயரும் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 8, 2023

கல்வி அமைச்சர் மண்ணிப்பு கோர வேண்டும், உங்களது கெளரவம் மேலும் உயரும் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கல்வி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தூஷண வார்த்தைக்காக கவலை தெரிவிப்பதற்கு பதிலாக மண்ணிப்பு கோர வேண்டும். அதுவே அவரின் கெளரவத்துக்கு மதிப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) புதன்கிழமை மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது கட்சியைச் சேர்ந்த ராேஹினி கவிரத்ன சபையில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஏற்பட்ட விவாதத்தின்போது அமைச்சர் சுசில் பிரேமஜந்தவினால் தெரிவிக்கப்பட்ட வார்த்தை பிரயோகத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

அவர் போன்ற படித்த ஒருவரினால் இவ்வாறான மோசமான வார்த்தையை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக அமைச்சர் தனது கவலையை சபையில் தெரிவித்திருந்தார். குறிப்பாக இன்று (08) சர்வதேச மகளிர் தினம். அதனால் அவர் கவலை தெரிவிக்காமல் அதற்காக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

அத்துடன் நான் தவறொன்றை செய்தால் அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பேன். அதற்கு தற்துணிவு, முதுகெலும்பு இருக்க வேண்டும். அதனால் மகளிர் தினமான இன்றைய தினத்தில் இடம்பெற்ற தவறுக்காக மன்னிப்பு கோருவதற்கு சிறந்த தினம். கவலை தெரிவித்தது போதாது. மனிப்பு கோர வேண்டும். அதனால் உங்களது கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக உங்களது கெளரவம் மேலும் உயர்வடையும்.

அத்துடன் ராேஹினி கவிரத்ன, தனக்கு ஏற்பட்ட சிறப்புரிமை மீறலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் அவரின் சிறப்புரிமை பிரேரணை எடுத்துக் கொள்ளப்படாமல் வேறு ஒரு உறுப்பினரின் சிறப்புரிமை பிரேரணை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால் பாராளுமன்றத்துக்குள்ளும் பெண் ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார். அதனால் பெண்களுக்கு எதிரான வன்முறையை பாராளுமன்றத்தில் இருந்தே தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment