அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக குறைவு : மூன்று நாட்களுக்குள் டொலரின் பெறுமதி 50 ரூபாய் குறைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 9, 2023

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக குறைவு : மூன்று நாட்களுக்குள் டொலரின் பெறுமதி 50 ரூபாய் குறைவு

இலங்கையின் ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நாளுக்குநாள் குறைவடைவதன் காரணமாக கடந்த சில நாட்களாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விரைவாக குறைந்து வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்னர் சந்தையில் சீனி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 220 ரூபாவாக இருந்ததோடு இன்று அது 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 340 விலிருந்து 325 வரை குறைவடைந்துள்ளது. 115 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயம் ஒரு கிலோ இன்று 95 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைடைந்துள்ளது. நேற்று (8) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கமும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

அதேபோன்றுநேற்று (8) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பிறீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளன.

அமெரிக்க டொலரின் பெறுமதி இவ்வாறு நாளுக்குநாள் குறைவடவதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் பில்லியன் ரூபாய் அளவில் நட்டம் அடைவதாக அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன நேற்று தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களுக்குள் டொலரின் பெறுமதி 50 ரூபாய் குறைந்துள்ளதோடு அது நூற்றுக்கு பத்து தொடக்கம் பதினைந்து வீத டொலரின் பெறுமதி குறைவு என அவர் தெரிவித்தார்.

ரூபாவுக்கு இணைந்ததாக டொலரை நிலையாக வைத்திருக்க மத்திய வங்கி தலையிட வேண்டுமெனவும் இந்த நிலைமை ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், சாதாரண மொத்த வர்த்தகர்கள் போன்று அனைத்து வர்த்தகர்களுக்கும் தாங்க முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment