வயது வந்தவர்களுக்கான பாலியல் பொம்மைகளின் இறக்குமதித் தடையை தென் கொரியா நீக்கியுள்ளது.
மக்களின் தனிப்பட்ட வாழ்வில் அரசு தலையிடுவதாக பல ஆண்டுகளாக நீடித்து வந்த விவாதத்தைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி பெரியவர்களின் அளவான பொம்மைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதோடு சிறுவர்கள் போன்று தோற்றம் கொண்ட பொம்மைகளுக்கு தொடர்ந்து தடை உள்ளதாக கொரிய சுங்க சேவை தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் பாலியல் பொம்மைகளுக்கு சட்டபூர்வ தடை இல்லை.
எனினும் 2018 தொடக்கம் அவை சுங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டு வருகின்றன. அது தென் கொரிய மரபு மற்றும் ஒழுக்கத்திற்கு கேடானது என்று அதிகாரிகள் கூறி வந்தனர்.
No comments:
Post a Comment