கலால் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக சமன் ஜயசிங்கவை நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான சமன் ஜயசிங்கவை குறித்த பதவிக்கு நியமிப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இப்புதிய நியமனம் எதிர்வரும் 2023 ஜனவரி 02ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment