(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000 ற்கும் மேற்பட்டோர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்று செல்கின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
60 வயது பூரணமான அதிகமான அரச ஊழியர்கள் ஒரே தடவையில் ஓய்வு பெற்றுச் செல்வதால் அந்த வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000 ற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
எவ்வாறெனினும் ஒரே தடவையில் இந்தளவு அதிக எண்ணிக்கையிலான அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் இடம்பெறாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என அறிவித்த போதும் தற்போதைய அரசாங்கம் அந்த வயதெல்லையை 60 ஆக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த வருடம் 31 ஆம் திகதியுடன் 30,000 ற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
கடந்த வருடத்தில் ஓய்வு பெற வேண்டிய அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்லாமை காரணமாகவே இந்த வருடம் அரச ஊழியர்கள் இந்தளவு அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment