மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தங்கை முறை உறவுக்கார குழந்தைக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.
குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாத பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களை காட்டி வந்துள்ளதுடன் அந்த குழந்தை மீது பாலியல் சேட்டை செய்த நிலையில் அவர்களது உறவினரான பெண் ஒருவர் கண்டு குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தையும் தன் மீது மாமா இவ்வாறு நடந்து கொண்டதாக தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சகோதரியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment