இறக்குமதி செய்யப்படும் இனிப்பு வகைகள், சவர்க்காரங்களின் உச்சபட்ச சில்லறை விலை (MRP) நாட்டுக்குள் கொண்டு வரப்படும் வேளையிலேயே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, சுயிங்கம் உள்ளடங்கலாக இனிப்புப் பண்டங்கள், சொக்லேட், பிஸ்கட், கேக், வாசனை சவர்க்காரம் அவை நாட்டுக்குள் நுழையும் இடத்திலேயே அவற்றிற்கான உச்சபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர், பதிவு செய்யப்பட்ட முகவரி போன்ற விபரங்களை ஆங்கில மொழியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
குறித்த விடயம் நவம்பர் 01ஆம் திகதி முதல் செல்லுபடியாவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment