ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனது இரண்டு மகள்மாரையும், ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் மனைவி பத்து வருடங்களுக்கு முன்னர் பிள்ளைகளை விட்டுச் சென்றதால் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் 24 வயது மூத்த மகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சந்தேகநபரான தந்தையால் பல வருடங்களாக இரு மகள்மாரும், 13 வயது மகனும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரால் 16 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வீட்டுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தியதில், சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment