(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியின் கூற்று தேர்தலை பிற்போடுவதற்கான நரித்தனமான செயலாகும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து திடுக்கிடச் செய்யும் சிறியதொரு பயமுறுத்தலாம்.
உள்ளூராட்சி மன்றத் தேரதல் முறைமை தொடர்பில் திடீரென கருத்து தெரிவித்திருப்பது, அந்த தேர்தலை பிற்போடுவதற்கான நரித்தனமான செயலாக இருக்கலாம்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்திருந்தபோதும், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த விடயங்களை பத்திரிகை செய்தி மூலமே தெரிந்து கொண்டதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் தெரிவித்தார். இது பாரிய விடயமாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையேன அடிப்படை நடவடிக்கைகளை தயார் செய்து வரும் நிலையில், இவ்வாறானதொரு கருத்தை ஜனாதிபதி தெரிவிப்பது உண்மையில் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல.
அதனால் அரசாங்கத்தின் கீழ்த்தரமான நோக்கத்தை தோற்கடிப்பதற்கு கட்சி, நிர பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment