(எம்.வை.எம்.சியாம்)
தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையை விற்பனை செய்வதற்கு முயன்ற இருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சல்பிட்டிகம பிரதேசத்தில் தெஹியத்தகண்டிய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையை விற்பனை செய்வதற்கு முயன்ற இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 35 வயதுடைய தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் புராதன மதிப்புடைய 1 அடி உயரம், மற்றும் 14 கிலோ 60 கிராம் நிறையுடைய முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையை விற்பனை செய்வதற்கு முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்கள் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment