சவூதி அரேபியாவில் பாரிய கட்டுமான தொழில் : ஆர்வமுள்ள இலங்கையர்கள் விண்ணப்பிக்கலாம் ! - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

சவூதி அரேபியாவில் பாரிய கட்டுமான தொழில் : ஆர்வமுள்ள இலங்கையர்கள் விண்ணப்பிக்கலாம் !

(எம்.ஆர்.எம்.வசீம்)

சவூதி அரேபியாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாரிய கட்டுமான வேலைத் திட்டங்களில் தொழில்சார் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகுதி வாய்ந்த இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டங்களில் கட்டிடக்கலை நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அளவீட்டாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் இருப்பதால், இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு அந்த வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சவூதி அரேபியா அதிகாரிகளுடன் கலந்துரையாட இருக்கின்றது.

அதன் பிரகாரம், கட்டிடக்கலை வல்லுநர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அளவீட்டாளர்கள் பணிகளில் ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த இலங்கையர்கள் எதிர்வரும் 05.11.2022 க்கு முன்னர் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும் ’சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறைக்கான தகுதி வாய்ந்த நிபுணர்களை அடையாளம் காணுதல்’ என்ற இணைய வழி ஊடாக அவர்களின் தகவல் மற்றும் சுயவிபரக்கோவையை சமர்ப்பித்து பணியகத்தின் தரவு வங்கியில் பதிவு செய்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த தொழிலுக்காக பதிவு செய்தல் மற்றும் மேலதிக தகவல்களை பணியகத்தின் 24 மணி நேர தகவல் மத்திய நிலையத்தின் தொழிநுட்ப தொடர்பாடல் இலக்கமான 1989 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் என இலங்கை வேளிநாட்டு வேலை வாய்ப்பு பணியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment