அவயவங்களை பெறுவதற்காக மூளைச் சாவடைந்தவர் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

அவயவங்களை பெறுவதற்காக மூளைச் சாவடைந்தவர் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார்

ரிஸ்வான் சேகு முஹைதீன் 

மூளைச் சாவடைந்த நபர் ஒருவரை அவரது உடலுறுப்புகளை பெறுவதற்காக பதுளை ஆதர வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப் படையின் 04ஆம் படைப் பிரிவிற்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப் படை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி இன்றையதினம் (31) இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

விபத்தொன்றில் மூளைச் சாவடைந்த நபர் ஒருவரே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகொப்டர், ஒரு அம்பியுலன்ஸ் வண்டியாக வடிவமைக்கப்பட்டு இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக, விமானப் படை குறிப்பிட்டுள்ளது.

குறித்த மூளைச் சாவடைந்த நபரின் முக்கியம் வாய்ந்த உடலுறுப்புகள், அவசியமான நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன், இயதமாற்று சிகிச்சைக்காக அவரின் இதயம் பயன்படுத்தப்படள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment