திடீர் சுகயீனம் காரணமாக 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, October 10, 2022

திடீர் சுகயீனம் காரணமாக 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(க.கிஷாந்தன்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் பாடசாலை ஒன்றில் 42 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 6 முதல் 11 ஆம் வகுப்புரையான 13 மாணவர்களும், 29 மாணவிகளுமே மயக்கம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும், மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு நேற்றும் (10) குறித்த நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர்கள் நேற்று மாலை கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment