(எம்.எம்.சில்வெஸ்டர்)
தற்போதைய 5 லீற்றர் 'பெற்றோல் கோட்டா' வை 10 லீற்றராக அதிகரிப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்தின்போது முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபாவை குறைக்கப்பதற்கு தயார் என இலங்கை சுயதொழில் வேலை வாய்ப்பு தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் மஹிந்த குமார தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி டயர்கள், டியூப்கள், பெற்றி மற்றும் உதிரிப்பாகங்களின் அதிக விலையேற்றம் காரணமாக முச்சக்கர போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் 12 இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலையை குறைத்து நிவாரணம் வழங்குமாறும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் 'பெற்றோல் கோட்டா' வை 10 லீற்றராக அதிகரித்து தந்தால், பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முதல் கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபா குறைக்கப்படும்.
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பயணிகள் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க மறுத்து நடந்து செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment